கேரட் மில்க் ஷேக்
தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், கெட்டியான பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத் துக் கொள்ளவும். பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குங்குமப்பூவை சேர்த்து (கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம்) பரிமாறவும்.
தினமும் குடிப்பதாக இருந்தால் குங்குமப்பூ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
டெல்லி கேரட் அல்வா
தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், சர்க்கரை - அரை கப், திக்கான பால் - 3 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, கேரட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். மூன்று கப் பாலை ஒரு கப்பாக சுண்டக் காய்ச்சி, வதக்கிய கேரட்டில் விட்டு சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.
டெல்லி கேரட் பாயசம்
தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பால் - 2 கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடிகனமான கடாயில் நெய் விட்டு, துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, பாலை சேர்க்கவும். பால் சிறிது கொதித்ததும் சர்க்கரை, மில்க்மெய்டை சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும், அதில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸை கலந்து பரிமாறவும்.
சூடாகவோ, ஜில்லென்றோ விருப்பம் போல் சாப்பிடலாம்.
கேரட் சூப்
தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், நறுக்கிய தக்காளி - கால் கப், வெண் ணெய் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேரட், தக்காளியை இரண்டு கப் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து வடி கட்டிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு, அதில் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதங்கியதும், கேரட் சாறை விட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து விடவும் (சூப் கெட்டியாக இருப்பதற்காக கார்ன்ஃப்ளாரை பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் பிரெட் துண்டுகளை பொரித்துப் போடலாம்.). பிறகு மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
கேரட் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், கேரட், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பணியார குழியில் பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.
கேரட் மோர்குழம்பு
தேவையானவை: நீளத் துண்டுகளாக நறுக்கிய கேரட் - அரை கப், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா ஆகியவற்றை கால் மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பிறகு அதில் ஊற வைத்த பருப்புக் கலவையை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். அதனுடன், தேங்காய் துருவல், சீரகம், மல்லித்தழை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட்டை வேக வைத்து அதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கேரட் கலவையில் சேர்க்கவும். தயிரை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கடைந்து, கொதிக்கும் கேரட் கலவையுடன் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
This entry was posted
on Monday, July 21, 2008
at 10:44 AM
and is filed under
கேரட் ரெசிப்பிஸ்
. You can follow any responses to this entry through the
comments feed
.