வெண்டைக்காய் சப்ஜி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 4, தக்காளி - 2, பூண்டு - 4 அல்லது 5 பல், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காயை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இது கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே போல் கோவைக்காயிலும் சப்ஜி செய்யலாம்.

முள்ளங்கி மசாலா கறி


தேவையானவை: வெள்ளை முள்ளங்கி - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு துண்டு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி, உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் பொடிமாஸ் போல் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.

உதிர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கிளறவும். கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

கோவைக்காய் - உருளை வதக்கல்
தேவையானவை: கோவைக்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 2, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

பீட்ரூட் மசாலா கறி


தேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும். காய் நன்றாக வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகுத்தூளை போட்டு 5 நிமிடம் வதக்கவும். காரம் தேவைப்பட்டால் மேலும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.


கேரட் - பனீர் குருமா



தேவையானவை: கேரட் - கால் கிலோ, பனீர் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, பூண்டு - 2 பல், வெங்காயம் - 4, தக்காளி - 4, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - 4 துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதுப் போட்டு வதக்கவும். கேரட், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளி, மீதமுள்ள வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கி சேர்க்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடித்து இதில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறுதியில் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


கோவைக்காய் - உருளை வதக்கல்


தேவையானவை: கோவைக்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 2, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

நவரத்ன குருமா

தேவையானவை: வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை பட்டாணி - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, பூண்டு - 4 பல், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - சிறிதளவு, கேரட் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்த காய்களை சேர்க்கவும்.

இதில் கசகசா, முந்திரிப்பருப்பு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சௌசௌ சப்ஜி


தேவையானவை: சௌசௌ - 2, உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 2, பச்சை பட்டாணி - அரை கப் , இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்துருவல் - 3 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியையும் உருளைகிழங்கையும் வேக வைக்கவும். தேங்காய்துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்துள்ள காய்கறிகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

சின்ன வெங்காயம் - தக்காளி மசாலா



தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 2, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். இதில் பாதி எடுத்து தக்காளி சேர்த்து லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். முழு பச்சைமிளகாயை சேர்க்கவும். இந்த வதக்கலுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். காரம் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

சுருள் தோசை  

Posted in


தேவையானவை: மைதாமாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு கப், முந்திரி - 11, ஏலக்காய் - 5, சர்க்கரை - ஒண்ணேகால் கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாமாவு, அரிசிமாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் சர்க்கரை, தேங்காய், முந்திரி, ஏலக்காயை போட்டு இளஞ்சூட்டில் கிளறி, கெட்டியான பூரணமாக தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் மைதா கரைசலை மெல்லிய தோசையாக வார்க்கவும். வெந்தவுடன் திருப்பிப் போட்டு, அதன் மேல் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பரவலாக உதிர்த்து, சிறிது நெய் விட்டு தோசையை சுருளாக சிறிய வடிவத்தில் சுருட்டவும்.

மாங்காய் சூப்  

Posted in




தேவையானவை: பச்சை மாங்காய் (முற்றியது) - 5, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், கிரீம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, புதினா இலை - 10 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு, சீவிய ஐஸ் - 2 கப்.

செய்முறை: பச்சை மாங்காயை தணலில் சுட்டெடுக்கவும். ஆற வைத்து தோல் நீக்கி, சதைப் பகுதியை தனியே எடுக்கவும்.ஒரு ஜாடியில் மாங்காய், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கிரீம், புதினா இலைகளைப் போட்டு கலக்கவும். மிருதுவாகும் வரை வேகமாக கலக்கவும். பிறகு சீவிய ஐஸை கலந்து சில்லென்று பரிமாறவும்.

விரும்பினால் வறுத்துப் பொடித்த சோம்பைத் தூவலாம். இதே முறையில் வெள்ளரி, பூசணி, சுரைக்காயிலும் செய்யலாம்.

பால் வடை  

Posted in



தேவையானவை: பச்சரிசி - 2 கப், பசும்பால் - 3 கப், உப்பு - ஒரு டீஸ்பூன், நெய் - பொரிக்க.

செய்முறை: பச்சரிசியை கழுவி வைக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் களைந்த அரிசியைப் போட்டு அரை வேக்காடாக வேக வைக்கவும். பிறகு அதை கெட்டியாக வடைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்க்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சின்னச் சின்ன வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்து எடுக்கவும். வித்தியாசமான சுவையோடு இருக்கும் இந்த வடை.

தானிய காய்கறி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், ஊற வைத்த தானிய கலவை - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, நறுக்கிய காய்கறி கலவை - ஒரு கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பரங்கிக்காய் சூப்

தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு துண்டு, வெங்காயம் - 1, தக்காளி - 1, பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 2 பல், எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: பரங்கிக்காயின் தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, பூண்டு, தக்காளி, வெங்காயம், பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும். 10 நிமிடம் வதங்கியதும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த சூப்பை மீண்டும் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி, பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

வெஜிடபிள் சீஸ் பர்கர்


தேவையானவை: கட்லெட் செய்ய: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், வேக வைத்த காய்கறி கலவை - அரை கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா (அ) கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - கால் கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க.

பர்கர் செய்ய: பன் - 1 (அ) பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - சிறிதளவு, துருவிய கேரட் - சிறிதளவு, மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு, தக்காளி சாஸ் - சிறிதளவு.

செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும்.

கீரை அடை



தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், புழுங்கல் அரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பருப்புகளையும் ஒன்றாகவும் அரிசியை தனியாகவும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். முதலில் அரிசியை போட்டு அரைத்து, அதனுடன் பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கீரை, வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூள், பச்சைமிளகாய், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிய அடைகளாக போட்டு எடுக்கவும்.

காய்கறி சட்னி இந்த அடைக்கு ஏற்ற சைட்-டிஷ்!

காய்கறிகள்  

Posted in






கேரட் மில்க் ஷேக்



தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், கெட்டியான பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத் துக் கொள்ளவும். பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குங்குமப்பூவை சேர்த்து (கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம்) பரிமாறவும்.

தினமும் குடிப்பதாக இருந்தால் குங்குமப்பூ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.



டெல்லி கேரட் அல்வா



தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், சர்க்கரை - அரை கப், திக்கான பால் - 3 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, கேரட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். மூன்று கப் பாலை ஒரு கப்பாக சுண்டக் காய்ச்சி, வதக்கிய கேரட்டில் விட்டு சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.


டெல்லி கேரட் பாயசம்



தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பால் - 2 கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான கடாயில் நெய் விட்டு, துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, பாலை சேர்க்கவும். பால் சிறிது கொதித்ததும் சர்க்கரை, மில்க்மெய்டை சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும், அதில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸை கலந்து பரிமாறவும்.

சூடாகவோ, ஜில்லென்றோ விருப்பம் போல் சாப்பிடலாம்.

கேரட் சூப்



தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், நறுக்கிய தக்காளி - கால் கப், வெண் ணெய் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேரட், தக்காளியை இரண்டு கப் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து வடி கட்டிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு, அதில் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதங்கியதும், கேரட் சாறை விட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து விடவும் (சூப் கெட்டியாக இருப்பதற்காக கார்ன்ஃப்ளாரை பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் பிரெட் துண்டுகளை பொரித்துப் போடலாம்.). பிறகு மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

கேரட் பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், கேரட், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பணியார குழியில் பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.

கேரட் மோர்குழம்பு



தேவையானவை: நீளத் துண்டுகளாக நறுக்கிய கேரட் - அரை கப், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா ஆகியவற்றை கால் மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பிறகு அதில் ஊற வைத்த பருப்புக் கலவையை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். அதனுடன், தேங்காய் துருவல், சீரகம், மல்லித்தழை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட்டை வேக வைத்து அதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கேரட் கலவையில் சேர்க்கவும். தயிரை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கடைந்து, கொதிக்கும் கேரட் கலவையுடன் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

படம்  

Posted